தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்திருந்தார்.
வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. எனினும் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர்.
துணிவு படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்தோடு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங், ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் & லே பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் இந்த பயணத்தில் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் கோயிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு துணிவு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நடிகர் அஜித் குமார், வடகிழக்கு மாநிலங்களில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சில தினங்களுக்கு முன் மேகாலயாவில் பாண்டிச்சேரி ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித், சில தினங்களுக்கு முன் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பைக் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விட்டதாக அவரது நண்பர் சுப்ரஜ் வெங்கட் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் உலக பைக் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது என குறிப்பிட்டு, உலக பைக் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தது என்றும் சுப்ரஜ் வெங்கட் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் நடிகர் அஜித் குமார், நாகாலாந்து மாநிலத்தில் பைக் ரைடு சென்ற போது அங்குள்ள திமாபூர் நகரில் உள்ள Ili ah ki ஹோட்டலில் தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு 5200 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
Listen News!