தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி பாடகியாக வலம் வருபவர் தான் ஆண்ட்ரியா. அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் பாடகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து பாடி பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா.
பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து தரமணி, வடசென்னை, அரண்மனை2, 3 போன்ற படங்களில் நடிது நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
இவர் சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்லுறியா மாமா.. என்னும் பாடலைப் பாடி இருந்தார். இப்பாடல் வேற லெவலில் வெற்றியும் பெற்றது.
இடையில் ஒருசில படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தும் இருந்தார்.அத்தோடு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஆண்டிரியா வடசென்னை படத்திற்கு பின் அனல் மேல் பனித்துளி, பிசாசு 2 போன்ற படங்களில் அரைநிர்வாணமாக நடித்தும் இருக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் , ஆண்டிரியாவின் 17 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இது வரை அனிரூத்தின் இசையில் பாடல் பாடவில்லை.
ஆரம்பகட்ட அனிருத்தின் இசை வாழ்க்கையில் இருவரும் ரகசிய காதலில் இருப்பதாகவும் அவருடன் நெருக்கமாக முத்தமிட்ட புகைப்படங்களும் லீக்கானது.
இதை பல மேடைகளில் ஆண்ட்ரியாவும் அனிரூத்தும் உண்மையை கூறி வந்தனர். இதன் காரணமாகவே அனிரூத் இசையில் ஆண்ட்ரியா பாடவில்லையாம்.
Listen News!