• Sep 20 2024

சாய்பல்லவி பற்றிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சாய்பல்லவி. இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிரேமம் திரைப்படடே இவரை பிரபல்யப்படுத்தியது.

நடிகை சாய்பல்லவி பட விழாக்களில் ர் பேசும்போது கிடைக்கும் ரெஸ்பான்ஸ அங்கு வேறு எந்த நடிகைக்கும் கிடைப்பதில்லை அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் அங்கு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது சாய் பல்லவி தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என தகவல் தீயாய் பரவி வந்தது. ஏற்கனவே அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் நிலையில் சாய் பல்லவியும் இணைந்து இருப்பதாக வந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


அதாவது சாய் பல்லவி ஒரு பழங்குடியின பெண்ணாக நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் உண்மையா என புஷ்பா பட தயாரிப்பாளாரிடம் விசாரித்த போது அந்த தகவல் முற்றிலும் உண்மை இல்லை என தெரிவித்து இருக்கிறார்.



இதன் மூலமாக சாய் பல்லவி பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 

Advertisement

Advertisement