• Sep 20 2024

பணமோசடி வழக்கில் யோகிபாபு மீது புகார் அளித்த பிரபல தயாரிப்பாளர்- இத்தனை லட்சம் வாங்கியிருக்கிறாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

 தனக்கென தனி பாணியில் அவர் தனித்த காமெடி நடிகராக வலம் வந்த போது, அவரது தோற்றம் அவருக்கு பெரிய அளவில் உதவியது. எதையெல்லாம் நகைப்பாக பார்த்தார்களோ அதையெல்லாம் தனக்கு ப்ளஸ் பாய்ண்டாக மாற்றிய யோகி பாபு தற்பொழுது தவிர்க்க முடியாத காமெடியனாக வளர்ந்து நிற்கின்றார்.


இன்றைய தேதியில், யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று கூறலாம். அவரின் ஒரு நாள் கால்ஷிட் கிடைக்காதா என யோகி பாபுவிடம் கெஞ்சம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சினிமாவில் அவர் பிஸியாக இருக்கிறார்.


இப்படியான நிலையில் யோகிபாபு மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அதாவது யோகிபாபு பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாகவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிப்பதாக ரூ.65 லட்சம் பேசி முன் பணமாக ரூ.20 லட்சத்தை யோகிபாபு பெற்றிருந்தார் என தயாரிப்பாளர ஹாசில் என்பவே புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement