• Sep 20 2024

சம்பளம் கொடுக்காமல் அலையவிட்ட பிரபல தயாரிப்பாளர்… மன உளைச்சலுக்கு ஆளான அஜித்! நடந்தது என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் அஜித். ஆரம்பகாலத்தில் அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிகர் என்பதையும் தாண்டி தற்போது கூட அஜித், கார் ரேஸ், பைக் டூர் என பிஸியாக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மகழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் ரெட் படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் அஜித்திற்கு சம்பளம் கொடுக்காமல் இன்று வா… நாளை வா என இழுத்தடித்துள்ளார்.

காரணம், ரெட் படத்தின் கதையை வேறுவிதமாக கையாண்டதால் அப்படம் தோல்வி அடைந்து அஜித்திற்கு சில நெகட்டிங் கமெண்ட்ஸ்கள் வந்ததாம். அதனால் லாபம் எடுக்காமல் சம்பளம் கொடுக்கமாட்டேன் என கூறியுள்ளார். 

அப்படத்தின் தயாரிப்பாளர். இதனால் அஜித் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் இதுபோன்ற தயாரிப்பாளர்களின் சவகாசம் வைத்துக்கொள்வதையே அஜித் நிறுத்திவிட்டார்.


Advertisement

Advertisement