சமீபகாலமாக தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வயர் சிங் விபத்தில் மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி uசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது.
அதாவது நிர்வயர் சிங் கடந்த 9 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.இவர் My Turn ஆல்பத்தில் Tere Bina பாடல் மூலமாக அவர் அதிகம் பாப்புலர் ஆகி இருந்தார்.
இந்த நிலையில் நிர்வயர் சிங் இன்று மெல்போர்னில் காரில் சென்றுகொண்டிருக்கும்போது வேகமாக வந்த இன்னொரு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாடகர் உயிரிழந்தார்.
காரை தாறுமாறாக ஓட்டி வந்த அந்த நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபரது கார் மொத்தம் மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறது.
நிர்வயர் சிங் மரணத்திற்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் மற்றும் முன்னணி பஞ்சாபி பாடகர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!