லியோ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் வரும் நிலையில் இன்னுமொரு சிக்கல் உருவாகியுள்ளது. எதிர் வரும் 19 ஆம் திகதி லியோ திரைப்படம் வெளியாவதில் மீண்டும் தொடர்கிறது சிக்கல்.
தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் இதுவரை தொடங்காத முன்பதிவு. லியோ படத்தின் முதல் வார வசூலில் தயாரிப்பு நிறுவனம் 75% சதவீதம் கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விடயமானது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏட்படுத்தும் என திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்க்கும் , திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரையில் இந்தசம்பவம் குறித்து எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.
இதனால் லியோ முதல் காட்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் அதிகளவிலான திரையரங்குகளில் லியோ ரிலீஸ் செய்வது தற்போது பெரும் சிக்கலாகத்தான் உள்ளது.
60 சதவீதம் மட்டும் பெற்றுக்கொண்டாலே திரையரங்குகளில் லியோ காட்சி ரிலீஸ் செய்வோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!