• Sep 21 2024

ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவிக்க வீட்டின் முன் கூடிய மக்கள்... மனைவி கூறிய விஷயம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரான அவரது படங்கள் வெளியாகும் நாளில் அவரது ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவது வழமை. 

அவ்வாறு இருக்கையில் அவரது பிறந்தநாளை சும்மா விடுவாங்களா.? அதாவது நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தின் பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடடுவது வழக்கம். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 

அந்தவகையில் மழையையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை முதலே ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு மலை போல் குவிந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவரின் மனைவியான லதா ரஜினிகாந்த் "ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அதனால் ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார். 


மேலும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் சார்பாக எல்லாருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து ரசிகர்களைச் சந்தித்திருப்பார். மழையில் யாரும் அவருக்காக காத்திருக்க வேண்டாம்" என்று கூறினார்.

இதனால் ரசிகர்கள் பலரும் மனமுடைந்து கவலையுடன் திரும்பியதாகவும், ஒரு சிலர் அவரைப் பார்க்க முடியவில்லை என கண்ணீர் சிந்தியதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement