• Sep 20 2024

தாலி ஏறிய கையோடு மஞ்சிமாவுக்கு நடந்த கொடுமை-கொந்தளித்த ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

காதல் திருமணம் செய்த நாள் அன்று நடிகை மஞ்சிமா மோகனுக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்த ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் மூன்று ஆண்டுகளாக காதலித்து நவம்பர் 28ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள். கவுதமும், மஞ்சிமாவும் எளிமையாக உடை அணிந்திருந்ததை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். அதே சமயம் திருமண புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, மஞ்சிமாவை அவரின் எடைக்காக கிண்டல் செய்தார்கள். மஞ்சிமாவை இப்படி எடைக்காக கிண்டல் செய்வது வழக்கமாகிவிட்டது.

அதாவது தன் திருமண புகைப்படங்களை ஆசை ஆசையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டார் மஞ்சிமா மோகன்.எனினும் அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தியபோதிலும், சமூக வலைதளவாசிகளோ எடையை காரணம் காட்டி மோசமாக விமர்சித்தார்கள். அத்தோடு சமூக வலைதளத்தில் தான் அப்படி என்று பார்த்தால் திருமணத்திற்கு வந்த சிலரும் மஞ்சிமாவிடமே எடையை பற்றி பேசி அவரை நோகடித்து உள்ளார்கள். எடை தொடர்பான விமர்சனங்களை தொடர்ந்து கேட்பதால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

எடை தொடர்பாக மஞ்சிமா மோகன் பேட்டியொன்றில் தெரிவித்திருப்பதாவது, எங்கள் திருமணத்திலேயே சிலர் எடை பற்றி கமெண்ட் அடித்தார்கள். முன்பெல்லாம் அது என்னை பாதித்தது, தற்போது இல்லை. அத்தோடு எனக்கு என் எடை பிரச்சனையாக இல்லை. தேவைப்பட்டால் என்னால் எடையை குறைக்க முடியும். படத்திற்காக எடையை குறைக்க வேண்டுமென்று கூறினால் நிச்சயம் குறைப்பேன்.மேலும் இது ஏன் அடுத்தவர்களுக்கு பிரச்சனை என்பது தெரியவில்லை என்று கூறினார்.

திருமணத்திற்கு முன்பு கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் மூன்று ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்ததாக பேசப்பட்டது. அத்தோடு நாங்கள் அப்படி எல்லாம் வாழவில்லை. பான்டமிக்கின்போது கவுதம் கார்த்திக் அவர் வீட்டில் இருந்தார். நான் என் வீட்டில் தனியாகத் தான் இருந்தேன் என விளக்கம் அளித்தார் மஞ்சிமா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கெரியரில் இருந்து பிரேக் எடுத்திருக்கும் மஞ்சிமா மோகன் நல்ல கதைக்காக காத்திருக்கிறார். அத்தோடு தன்னை கவரும் கதை கிடைத்தால் நடிக்க ஒப்புக் கொள்வாராம். கெரியரில் என்ன செய்ய வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார் மஞ்சிமா மோகன். மனைவியின் கெரியருக்கு உறுதுணையாக இருக்கிறார் காதல் கணவரான கவுதம் கார்த்திக். அத்தோடு மூன்று ஆண்டுகளாக காதலித்தபோதிலும் அது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.மேலும் அது எப்படி சாத்தியமானது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அண்மையில் தான் கவுதம், மஞ்சிமா பற்றி கிசுகிசுவே வந்தது.


Advertisement

Advertisement