தமிழ்சினிமாவில் நடிகையாகவும், சிறந்த நடன கலைஞராகவும் திகழ்ந்தவர் நடிகை சுனிதா ஆவார். இவர் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் பலரின் மனதை வென்றுள்ளார்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுனிதா தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார் அதாவது கிரிப்டோகரென்ஸி மூலம் நிதியை வைப்பில் இட்டு அதன்மூலம் தனது சகோதரி ஏமாற்றப்பட்ட விடயத்தை பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் இதுபோன்ற நிதிப் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அவரது சகோதரியின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் இன்ஸ்டாகிராமின் கதைகளில் பகிர்ந்துள்ளார் .அதிர்ச்சியளிக்கும் இந்த விடயம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது
Listen News!