தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஏராளமான சுவாரசியமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது . ரசிகர்கள் விரும்பும் வகையில் பு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே-2.
இதில் திருமணத்தில் நடந்த சிறு தவறு காரணமாக காதலர்களாக இருந்த ஜீவாவும் காவியாவும் பிரிந்ததோடு ஜீவா ப்ரியாவையும் பார்த்தி காவியாவையும் திருமணம் செய்தனர்.
என்ன தான் குடும்பத்திற்காக இவர்கள் தமது காதலை தியாகம் செய்திருந்தாலும் காவியா பார்த்தியுடன் சேர்ந்து வாழக் கூடாது என அவரது அம்மா முதல் அத்தை எனப் பலரும் திட்டம் தீட்டி வந்தனர். ஒரு வழியாக காவியா காதலித்த விடயம் பார்த்திபனுக்கும் தெரிந்து விட்டது.
அத்தோடு அத்தை மகளான ரம்மியாவைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டதோடு பார்த்திபன் ரம்மியாவின் திருமணம் மணமேடைக்கு வந்து விட்டது.
இந்நிலையில் காவியாவுடன் பார்த்தி கதைக்க நினைத்து அதுமுடியாமல் போக தற்போது காவியாவிற்கு உண்மைகள் தெரிந்து திருமணத்தை நிறுத்த ஓடி வருகின்றார்.
அப்பொழுது பார்த்தியின் அத்தையால் ரவுடிக்கும்பல்கள் அனுப்பப்பட்டு காவியா கடத்தடும் நேரத்தில் காவியா காப்பாற்றப்பட்டு திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்துவிடுகின்றாள்.
பார்த்தியும் ரம்யாவின் கழுத்தில் தாலியை கொண்டு போகும் நேரம் பார்த்தி எனக் கத்த தாலி கட்டுவதை நிறுத்திவிட்டு பார்த்தியும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்.இத்துடன் அந்த ப்ரமோ நிறைவடைகின்றது.
இதனையடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் காத்திருக்கும் நேரத்தில் பார்த்தி-ரம்யா திருமணம் நிறுத்தப்படும் போல தெரிகின்றது.மீண்டும் காவியா-பார்த்தி இணைவார்கள் போல தோன்றுகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!