• Sep 20 2024

அப்பா தான் மகன் வடிவில் வந்திருக்கார்- சிவகார்த்தியேகனுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது தந்தைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒவ்வொரு தந்தையர் தினம் அன்றும் தனது தந்தையை நினைத்து உருக்கமாக டுவிட் செய்வார். அதனைப் பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவார்கள்.

ஆனால் இம்முறை அவரது ரசிகர்கள் ஒரு வேண்டுகோளினை விடுத்திருந்தார்கள்.

அதாவது "இந்தத் தந்தையர் தினத்தில் தயவு செய்து அப்பாவை நினைத்து வேதனையில் டுவிட் செய்ய வேண்டாம். அப்பா தான் உங்கள் மகன் குட்டிப் பையன் குகன் வடிவில் வந்திருக்கிறார். அதனால் தந்தையே மகனாக வந்த சந்தோசத்தை கொண்டாடுங்கள் அண்ணா" என ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு கூறியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement