தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் ஒளிபரப்பாகி 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் 7பேர் வெளியேறி தற்போது 14 பேர் மட்டுமே உள்ளார்கள்.
நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது சண்டைக்கும், சச்சரவிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அணிகளாக பிரிந்து ஒருகுழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாடி வருகின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் தான் மட்டும் தான் விளையாடுவேன் என அடம்பிடிக்கும் அசீமிடம் மைனா நந்தினி உட்பட பலரும் கேள்வி கேட்க விக்ரமனும் அசீமுடன் சண்டை போடுகின்றார்.இந்த நேரம் பார்த்து கண்கலங்கி அழுகின்றார் இலங்கைப் பெண்ணான ஜனனி.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!