• Sep 20 2024

பணம் கொடுத்து அதைப் பண்ணுறார்... பிரபல நடிகைக்கும் விஜய் தேவர்கொண்டாவிற்கும் இடையில் வெடித்த மோதல்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அனசுயா பரத்வாஜ். சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்து அங்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

அந்தவகையில் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் மூலமாக ஏராளமான ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா -2 விலும் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் தற்போது இவருக்கும் நடிகர் விஜய்தேவரகொண்டாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. அதாவது விஜய்தேவரகொண்டா சிலருக்கு பணம் கொடுத்து தனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறுகள் பரப்பி வருகிறார் என குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார் அனுசுயா. 


இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் ''அர்ஜுன் ரெட்டி படம் வெளியானபோது அதில் விஜய்தேவரகொண்டா பேசிய மோசமான வசனங்கள் பல இருந்தது. அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் மிகவும் வன்மையாக கண்டித்தேன். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இதுபோன்ற வசனங்கள் தான் முக்கிய காரணமாகிறது என்று பேசினேன். 


இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் என்னை தொடர்ந்து மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் விஜயதேவரகொண்டாவோ அவர்களை விஜய் தேவரகொண்டா அவர்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகின்றார்.

மேலும் அவரது குழுவில் இருந்த ஒரு நபரும் என்னை அவதூறு செய்து கருத்து பதிவிட்டதாக நான் அறிந்தேன். அவர்கள் அனைவரும் விஜய் தேவரகொண்டாவுக்கு தெரியாமல் இதை செய்து இருக்கமாட்டார். அவர் தூண்டுதல் பேரில்தான் இது எல்லாமே நடக்கிறது என்பது எனக்கு தெரிந்தது. இவ்வாறாக விஜய் தேவரகொண்டா பலருக்கு பணம் கொடுத்து எனக்கு எதிராக சமூங்க வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்'' என தெரிவித்துள்ளார் நடிகை அனசுயா பரத்வாஜ்.

Advertisement

Advertisement