• Sep 20 2024

விஜய்யின் வாரிசு பட முதல் பாடலுக்கு வந்த எதிர்ப்பு-சிக்கலில் மாட்டி தவிக்கும் படக்குழு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் 'வாரிசு'.தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். 

படத்தின் ஃபஸ்ட் மற்றும் சமீபத்தில் முதல் பாடல் வெளியாகி இருந்தது. விஜய் பாடிய இந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்களின் பேவரெட் லிஸ்டில் ஏற்கெனவே இணைந்துவிட்டது.

மேலும் இப்பாடலில் உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது.

விஜய் போன்ற நடிகர்களின் பாடல்களை சிறுவகர்கள் கூட விரும்பி பாடுவார்கள், அப்படி இருக்க இதுபோன்ற வரிகளை விஜய் எப்படி எழுத அனுமதித்தார், சமூக பொறுப்பு வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement