தெலுங்கு திரையுலகில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் கிருஷ்ணா. அந்தவகையில் இவர் கடந்த 1991-ஆம் ஆண்டு 'பாரத் பந்த்' என்ற படத்தில் வில்லனாக நடித்து அதன் மூலம் பிரபலமானார்.
சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்னர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணாவை நடிக்க வைத்தது இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா என்பவர் தான். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் குவிந்து வந்தன.
அந்தவகையில் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து வந்த கிருஷ்ணா, தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த கிருஷ்ணா நேற்று தனது 88 வயதில் காலமானார். அதாவது வயதுமூப்பு காரணமாக சென்னையில் சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரின் மறைவானது தெலுங்கு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!