• Sep 20 2024

4.30 க்கு போட வேண்டிய படம் 5 மணி ஆகியும் போடல ... கோபத்தில் ரசிகர்கள் செய்த செயல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இதுவரைக்கும் ஏராளமான படங்கள் வெளி வந்திருக்கின்றன. இருப்பினும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தது.


அந்தவகையில் இப்படமானது இன்று காலை 4.30 மணியளவில் இருந்தே ஆரம்பமாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நனவாக்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதனை நம்பிய சென்னை அயனாவரம் பகுதியிலுள்ள ரசிகர்களும் காலை 4.30 மணியிலிருந்தே இப்படத்திற்காக திரையரங்கில் காத்து இருந்தார்கள்.


ஆனால் காலை 5.00 மணி ஆகியும் படம் ஆனது போடப்படவில்லை. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் எழுந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement