விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்கியாவைக் கைவிட்டதில் இருந்து பாக்கியா தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேறிக் கொண்டு வருகின்றார். அத்தோடு தன்னுடைய குடும்பத்தையம் நன்றாகக் கவனித்து வருகின்றார்.
அண்மையில் பாக்கியாவின் மகள் இனியா பிளஸ் டூ பரீட்சையில் நல்ல பெறுபேற்றைப் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு விஸ்காம் படிப்பதற்காக காலேஜிலும் சேர்ந்துள்ளார். இனியா காலேஜில் சேர்ந்ததில் இருந்து பாக்கியாவுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.
இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா காலேஜில் சேர வேண்டும் என்பதற்காக எழில் அட்மிஷன் போஃம் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றார். அந்த போஃமை வாங்கி பாக்கியா சந்தோஷத்துடன் பார்க்கின்றார்.
பாக்கியா காலேஜில் சேர்ந்த விஷயத்தை இனியா கோபிக்கு சொல்கின்றார். அப்போது கோபி அவளுக்கு எந்த காலேஜில் இடம் கொடுத்தாங்க என்று கேட்க என் காலேஜில் தான் படிக்கப் போறாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!