விஜய் டிவியின் முக்கிய விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா' ஷோ ஆனது கடந்த 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் நடத்தி வருகிறார்.
அதிலும் குறிப்பாக இதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தான் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. இந்த இந்நிலையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதாவது மாமனார் மற்றும் மருமகள் என்ற தலைப்பின் கீழ் இந்த விவாதம் இடம்பெற்றுள்ளது.
அதில் வேலையில்லாத தனது மகனை திருமணம் செய்து கொள்ள முன்வந்த பெண்ணையும், அவர் மருமகளிடம் பேசிய வார்த்தைகளையும் மாமனார் அரங்கத்தில் கூறியுள்ளார். அதாவது என்னுடைய மகன் வேலையே பார்க்கல ஆனால் லவ் பண்ணுறான் என்கிறார். அதற்கு கோபிநாத் லவ் பண்ணுறதையே ஒரு வேலையாய் பாக்கிறான் போல எனக் கூறுகின்றார்.
பின்னர் மாமனார் கூறுகையில் என் பையனுக்கு வேலை இல்லை என்று தெரிந்தும் என் மருமகள் வெடிங் பண்ணி இருக்கா எனக் கூறுகின்றார். இதனை கேட்டு ரொம்பவும் பிரமித்துப் போன கோபிநாத், வெளியே உனக்கு மீம் கிரியேட் செய்து விடுவார்கள் என்று கூறி, அது என்ன மீம் என்றால் "தூக்குடா அந்த செல்லத்தை என்று சொல்லி உங்க போட்டோ போடுவாங்க" எனக் கூறியுள்ளார்.
கோபிநாத்தின் இந்த பேச்சால் குறித்த அந்தப் பெண் வெட்கத்தில் தலைகுனிந்துள்ளார். அத்தோடு அரங்கமே விழுந்து விழுந்து சிரித்துள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!