தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் எப்போதுமே திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் அனைவருமே தன்னுடைய குடும்பத்தை மிகவும் ஒரு நல்ல விதமாக தான் பார்த்து வருகிறார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் ஒரு சில நடிகைகள் மட்டும் தான் தன்னுடைய அம்மாவை சரியாக கவனித்துக்கொள்வதில்லை.
ஆனால் ஆரம்பத்தில் தன்னை வளர்க்க பல கூலி வேலை செய்து இவ்ளோ உயரத்திர்க்கு வருவதற்கு முக்கிய காரணமே அவர்களுடைய அம்மாவாக தான் இருக்க முடியும். இருப்பினும் இப்போது அதே அம்மாவை தனியாக வீட்டை விட்டு அனுப்பி ஒதுக்கி வரும் நடிகைகளின் எண்ணிக்கை என்பது மிகவும் அதிகரித்து வருகிறது,
அதேபோன்று தான் சின்னத்திரைப் பிரபலமான நடிகை ஒருவர் தன்னுடைய அம்மாவை வீட்டில் இருந்து வெளியே அனுபியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் இவர் சிறுவயதாக இருக்கும் போது பல கூலி வேலைகள் செய்து தான் அவரைப் படிக்க வைத்துள்ளார் அவரது அம்மா.
அவர் வேறு யாரும் இல்லை. மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் `ஆனந்தம்’, `தென்றல்’ போன்ற தொடரில் நடித்து பிரபலமான நடிகை தேவி கிருபா தான். இவர் தற்போது தொலைக்காட்சி சேனல் ஒரு கிச்சன் ஷோவுக்கு தொகுப்பாளினியாக இருக்கிறார்.
இந்நிலையில் தான் அவரது தாயார் மதுரவாயல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக கூறியுள்ளார். அதாவது "ஆரம்பத்தில் இருந்தே என்னுடைய பொண்ணு வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பகலில் வேலை செய்வது மட்டும் இல்லாமல் இரவிலும் அதிக நேரம் வேலை செய்து தான் என் மகளை வளர்த்துள்ளேன்.
அதுமட்டுமல்ல என்னுடைய மகள் படப்பிடிப்பு சென்றால் நானும் போவேன், மேலும் எப்போதும் என் மகளுடன் சேர்ந்தே தான் இருப்பேன், என் மகன் கோகுலும் அவளுக்காக கிட்டத்தட்ட அவகூடவே தான் இருப்பான். டிரைவர் மாதிரி அவளுக்காக கார் ஓட்டியிருக்கான்.
ஆனால் இப்போது எனக்கு வயதாகிய காரணத்தினால் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டாள். ஆனால் இப்போது நான் எங்கு போவது என்று தெரியாமல் ஒரு அனாதை ஆச்சிரமத்தில் தான் தங்கி இருக்கேன், மேலும் பல நாள் கரடு முரடான பாதையில் கூட படுத்து இருக்கேன். என் மகன் தான் எனக்கான செலவைப் பார்த்துக்கிறான்.
இப்போதெல்லாம் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் பெற்றோர்களை சரியாக கவனிக்கமுடியாமல் ஆச்சிரமத்தில் சேர்த்து விடுகிறார்கள், இதோ… எட்டு மாசம் ஆகுது வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு எதிரில் இருக்கும் கோயில், தர்கா வாசல்லதான் படுத்துத் தூங்குறேன்.
தெரிஞ்ச யோகா, டான்ஸ் இப்போ கைக்கொடுக்குது. தெரிஞ்சவங்களுக்கு கிளாஸ் எடுக்கிறேன். பல நாள்கள் பட்டினி கெடந்தாச்சு" எனக் கண்ணீர் கலந்த தொனியுடன் கூறி இருக்கின்றார்.
மேலும் "இது இப்படியே போனால் என் வாழ்க்கை கடைசியில் என்ன ஆகும் என்று தான் தெரியவில்லை, தயவுசெய்து திருமணம் ஆனால் ஒரு குழந்தையோடு மட்டும் யாரும் நிறுத்தி விடாதீர்கள் இரண்டு குழந்தை கட்டாயம் பெற்றுக்கொள்ளுங்கள். காரணம் என் வாழ்க்கை இப்படி ஆனது போல உங்களில் யாருக்காவது ஒரு வாரிசு பார்க்கவில்லை என்றால் கூட மற்ற வாரிசு பார்க்கும்" என்று கூறியுள்ளார்.
அத்தோடு "இனிமேல் நான் யாரிடமும் கையேந்தி பணம் கேட்கமாட்டேன் என்னுடன் தொழில் உள்ளது நாள் என் பசியை போக்கிக்கொள்வேன்" எனவும் கூறி இருக்கின்றார்.
Listen News!