• Sep 20 2024

இதயத்திற்கு அமைதியும் நிம்மதியும் தேவை- இளைஞர்களுக்கு யுவன் சங்கர் ராஜா கூறிய ப்ரீ அட்வைஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா.இவரது பாடல்கள் தான் ரசிகர்களின் இதயத் துடிப்பாகவும் இருந்து வருகின்றது. இதனால் இவருடைய பாடல்களுக்கான மவுஸும் அதிகம் எனலாம்.

இந்த நிலையில் இளைஞர்கள் தங்கள் இதயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபல குறும்பட விழா உன்று நடைபெற்றது. அந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  ஒளிப்பதிவாளர் ஓம்.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


அதில் பேசிய யுவன் சங்கர் ராஜா ஒரு இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அமைதியும், நிம்மதியும் தேவை. ஆனால் பணம், வீடு, சொத்து என தேடி ஓடி இறுதியில் மனநிம்மதியை இழந்து விடுகிறோம் என கூறினார்.

எனவே,  இதயத்தை பாதுகாக்க அமைதியும், நிம்மதியும் தேவை. இதை முன்வைத்து இந்த குறும்பட விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  மேலும் போட்டியாளர்களுடன் இணைந்து தன் இசையில் உருவான ஒரு பாடலை பாடி மகிழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement