தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில் வருகிற 2023 பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகிறது. அதுமட்டுமல்லாது வீரம் - ஜில்லா படங்களின் மோதலுக்கு பின் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் - அஜித் படங்கள் ஒன்றாக திரையரங்கில் வெளியாகவுள்ளது.
அந்தவகையில் இப்பட ரிலீஸிற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகிறார்கள். மேலும் சில நாட்களுக்கு முன் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களின் புக்கிங் UK-வில் அமோகமாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ப்ரீ புக்கிங்கில் வாரிசு திரைப்படம் 66 ஷோக்கள் போடப்பட்டுள்ள நிலையில் சுமார் ரூ. 14 லட்சம் வரை இதுவரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்தோடு 36 ஷோக்கள் மட்டுமே போடப்பட்டுள்ள துணிவு திரைப்படம் ரூ. 5 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தை விட குறைந்த ஷோக்கள் கிடைத்ததால் மட்டுமே துணிவு படத்தின் வசூல் குறைவாக வந்துள்ளது என்றும், இரு படங்களுக்கும் சமமான ஷோக்கள் கிடைத்திருந்தால் சமமான வசூல் வந்திருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!