• Sep 20 2024

மாமன்னன் படம் குறித்து... உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... குஷியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடிக்கின்றனர். 

மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (ஜூன் 29) தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. அதிலும் குறிப்பாக இப்படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடைபெறும் என மிரட்டல் வெளியாகியுள்ளது. 


அதேபோன்று மாமன்னன் படத்தை வெளியிட தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் ராம சரவணன் தாக்கல் செய்துள்ள குறித்த மனுவில், "ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பு 20 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் முழுவதும் முடிந்துவிடும். ஆனால், மாமன்னன் படத்தை தனது கடைசி படமாக அறிவித்துள்ளார். 

நாங்கள் இதுவரை ஏஞ்சல் படத்திற்கு ரூ. 13 கோடி செலவு செய்துள்ளோம். ஏஞ்சல் படம் முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 8 நாட்கள் கால்ஷீட் கேட்டும் உதயநிதி அதைத் தர மறுக்கிறார். ஏஞ்சல் படத்தை முழுவதும் முடிக்க வேண்டும் அல்லது இழப்பீடாக உதயநிதி ரூ. 25 கோடி தர வேண்டும். அதுவரைக்கும் மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் தற்போது இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாமன்னன் படத்தை வெளியிட தடையில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் நாளை எதிர்பார்த்தது போல் படம் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement