• Sep 20 2024

திருவண்ணாமலை திரையரங்கில் நடந்த அசம்பாவிதம்! ரசிகர் ஒருவரின் கால் முறிவு

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்  விஜய் த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்களின்  நடிப்பிலும் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் இன்றைய தினம் உலகெங்கும் திரையிடப்பட்டிருக்கின்றது. 


அண்டை மாநிலங்களில் இப்படம் நான்கு மணிக்கு வெளியான நிலையில் தமிழ்நாட்டில் முதல் காட்சி 4 மணியில் இருந்து தொடங்குகின்றதா? அல்லது 7 மணியில் இருந்து ஆரம்பிக்கிறதா என்ற குழப்பம் கடைசி வரை நீடித்தது. கடைசியில் அரசு அனுமதித்தபடி தமிழ்நாட்டில் 9 மணியில் இருந்தே 'லியோ' முதல் காட்சி ஆரம்பமாகியிருந்தது. இதில் திரு வண்ணாமலையில் உள்ள திரையரங்கு ஒன்றில் முதல் நாளிலே படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்தனர். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் அவர்களும் படம் பார்க்க ஆர்வம் காட்டினர். அந்த சமயத்தில் டிக்கெட் கிடைக்காத ரசிகர் ஒருவர் படத்தை பார்க்க தியேட்டருக்குள் நுழைய முயன்றுள்ளார். அவரை அங்குள்ள ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


அதனால் ரசிகர் ஒருவர்  தியேட்டர் பின்பகுதியில் இருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார். அப்போது தவறி விழுந்து அவரது கால் முறிந்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement