உதவி இயக்குனர் குலசேகரனை நடிகர் நவீன் குமார் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் இருதரப்பும் சமாதானமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன !!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தைத் திருடாதே என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் நவீன். இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் தற்பொழுது மீண்டும் கண்ட நாள் முதல் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் இவருக்கும் சன்டிவியில் பிரபல பத்திரிகை வாசிப்பவரான கண்மணிக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தை அடுத்து இருவரும் ஹனிமூனுக்கென்ற சென்ற புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
இவ்வாறு இருக்கையில் இவரை பற்றி ஒரு தகவல் சில நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது.அது என்னவென்றால் கண்ட நாள் முதல் என்னும் சீரியலில் சூட்டிங் ஸ்பொட்டில் உதவி இயக்குநரை கன்னத்தில் அறைந்த சம்பவம்.இதனை தீர்க்கும் வகையில் நவீன் ஒரு செயல் செய்துள்ளார்.
அதாவது வசனத்தில் ஏற்பட்ட தவறை சுட்டிக் காட்டி பேசிய நேரத்தில் கைக்கலப்பு ஏற்பட்டு குலசேகரன் தாக்க வந்ததாகவும் அதை தடுக்க கைநீட்டும் போது அவருக்கு அடி பட்டதாக நடிகர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.
குலசேகரனின் மருத்துவ செலவு மற்றும் காயம் காரணமாக இரண்டு நாட்கள் வேலைக்கு செல்லாததால் ஏற்பட்ட இழப்பு என இரண்டிற்கும் சேர்த்து ஒரு தொகையை தர நடிகர் நவீன் குமார் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Listen News!