தமிழ் ரசிகர் ஒருவர் தனக்கு கோயில் கட்டியிருப்பதாக பிரபல மலையாள நடிகை தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு மலையாளத்தில வெளியான பாய் ஃபிரண்ட் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் ஹனி ரோஸ்.
இதன் பின்னர் முதல் கனவே படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம் பூச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ள ஹனி ரோஸ், மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப் என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் ஹனி ரோஸ்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஹனி ரோஸ், தனக்கு தமிழ் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளதாக கூறியுள்ளார். அவர் பெயர் பாண்டி என்றும் தன்னுடைய முதல் படத்தில் இருந்தே அவர் தனக்கு ரசிகராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தன்னுடன் அடிக்கடி போனில் பேசி வரும் அந்த ரசிகர் தனது பிறந்த நாளில் கோவிலில் பாயாசம் வழங்கி வருவதாகவும் பூரிப்புடன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் எங்கு அவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது என்ற தகவலை கூற மறுத்துவிட்டார் ஹனி ரோஸ்.
Listen News!