விஜய் டிவியின் முக்கிய விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா' ஷோ ஆனது கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதாவது 'சூர்யவம்சம் போல காதலித்து தம்பதிகளாய் முன்னேறியவர்கள்' என்ற தலைப்பில் இந்த வார நீயா நானா ஷோ நடத்தப்பட்டது.
இதில் பலரும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை, தியாகங்களை, கவலைகளை மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், ஒருவர் மழை வெள்ளத்தால் தான் முற்றிலும் தன்னுடைய வாழ்க்கையை இழந்த நிலையில், தன்னுடைய மனைவி கொடுத்த நம்பிக்கையால், உணவுத் தொழிலை தள்ளுவண்டியில் தொடங்கி தற்போது ஹோட்டல் வைப்பது வரை வளர்ந்துள்ளது குறித்த தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமல்லாது இந்த கடினமான காலத்தில் தன்னுடன் இருந்து தனக்கு வழிகாட்டியாய் இருந்த தன்னுடைய மனைவியின் தியாகத்தையும் அவர் அந்த ஷோவில் பகிர்ந்து கொண்டார். இந்த சம்பவத்தை அவர் கூறும்போது அவரது மனைவியின் உடைய கண்கள் கலங்கியதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. இவ்வாறாக அவர்கள் இருவரும் தங்களுடைய கஷ்டகாலத்தில் சூரியவம்சம் படத்தை போல ஒன்றிணைந்து செயல்பட்டதை ஆனந்தத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
இவர்களைப் போலவே இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்த இளைஞர், ஒருபக்க பார்வையை இழந்த மனைவி சிறப்பாக கவனித்துக் கொண்ட கணவர் என அடுத்தடுத்த தங்களுடைய காதல்களை கோபிநாத் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அவர்களும் இந்த இக்கட்டான நிலையில் தன்னை விட்டுப் பிரியாத மனைவியின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர்.
Listen News!