கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வெளியானது. கிராமத்து காளையனாக ரஜினிகாந்த் நடித்திருந்த இந்த திரைப்படத்தில், நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், தலைவரின் மாஸ் காட்சியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் குடும்ப தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படமாக அமைந்தது.இந்தப் படத்தை தொடர்ந்து, தற்போது கோலமாவு கோகிலா டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்து வருகிறார். மேலும் வசந்த ரவி, யோகி பாபு ரோபோ சங்கர், சுனில் போன்ற பல இப்படத்தில் இணைத்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் ஷுட்டிங் இதுவரை செட் போட்டே நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது அவுட்டிங் சைட்ல இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றதாம்.அந்த வகையில் மங்களுர் கடற்கரையிலும் நடைபெற்று வருகின்றதாம்.இதில் ஒரு காட்சி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
அதாவது நடிகையும் அரசியல்வாதியுமான சசிகலா ஜெயிலில் இருக்கும் போது அவர் பிரபல மால் ஒன்றிற்கு ஷாப்பிங் சென்று வந்ததாக வீடியோ எல்லாம் வெளியாகியிருந்தது. இந்த காட்சியைத் தான் இதில் வைத்துள்ளார்களாம். அதாவது ஜெயிலில் இருக்கும் கைதி இப்படி சுற்றித் திரிவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.இந்த தகவல் புதிதாக இருந்தாலும் ஒருவேளை சசிகலாவை அட்டாக் பண்றமாதிரி படக்குழு பண்ணிட்டு இருக்கிறாங்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!