தற்போது வாரிசு படத்தை பற்றி தான் திரையுலகினர் மத்தியில் ஒரே பேச்சாக உள்ளது. அதற்கு காரணம் தயாரிப்பாளர் தில் ராஜு கொடுத்த பேட்டி தான் காரணம்.
தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஸ்டார், அஜித் அவருக்கு கீழே தான். அதனால் இருவரது படங்களுக்கும் சம அளவில் தியேட்டர் பகிர்ந்து கொடுத்தால் எப்படி.
அதனால் உதயநிதியை பார்த்து வாரிசுக்கு அதிகம் தியேட்டர் கேட்க போகிறேன் என அவர் தெரிவித்து இருக்கிறார்.
வாரிசு கதையில் முதலில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க தான் முயற்சி செய்ததாக தில் ராஜு தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர் மறுத்ததால் அதன் பின் ராம் சரனிடம் கேட்ட நிலையில் அவரும் ஷங்கர் படத்தில் பிசியாக நடித்து வருவதால் மறுத்துவிட்டார். அதன்பின் பிரபாஸ், அல்லு அர்ஜுன் அகியோரும் அந்த கதையில் நடிக்க மறுத்தார்கள்.
அதன் பின் தான் விஜய் இடம் கதை சொல்லி அவர் ஓகே செய்தார் என தில் ராஜு தெரிவித்து இருக்கிறார்.
Listen News!