இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர்களாகத் திகழ்பவர்கள் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோராவர்.
பல்வேறுபட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்த இவர்கள் இன்று வரை ஹிந்தி சினிமாவின் ஜாம்பவான்கள் ஆகவே கருதப்படுகின்றனர் அதுமட்டுமில்லாது சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து இன்றுவரை வெற்றி கதாநாயகர்கள் ஆகவே தீபிகாவும், ஷாருக்கானும் திகழ்கின்றனர்.
அது மட்டுமல்லாது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களாக இவர்கள் திகழ்கின்றனர். இவர்கள் திரைப்படம் என்றாலே இப்போதும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய ஆர்வம் காணப்படும்.
அந்த வகையில் ஷாருக்கான் தற்போது தனது தவான் படத்தை முடித்துள்ளார். அத்துடன் தற்போது நடிகர் அட்லி இயக்கும் ' ஜவான் ' திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் திரைப்பட குறிப்புகள் தற்போது சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஷாருக்கான் ஆகியோர் தற்போது சென்னை வந்து இறங்கி உள்ளனர்.
தீபிகா படுகோனே இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் இவ்வாறு சென்னை வந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனை காணலாம்.
Listen News!