நடிகர் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் லிகர் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகின்றார் அனன்யா பாண்டே. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கிய ஒரு பான்-இந்தியத் திரைப்பட இப்படம் ஹிந்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 25, 2022 அன்று திரையரங்குகளில் வர உள்ளது.
அந்த வகையில் தெலுங்கானாவில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்வில் கலந்த கொண்ட அனன்யா தெலுங்கில் ரசிகர்களுக்கு உரையாட முடிவு செய்தார். நிகழ்ச்சியில் ஏராளமான கூட்டத்தின் முன்னிலையில் விஜய்யை "புஜ்ஜி கண்ணா" என்று அழைத்துள்ளார்.
அத்தோடு லிகரின் ஒரு பகுதியாக இருப்பது பற்றிய தனது உற்சாகத்தைப் பற்றியும் பேசினார்.அத்தோடு எமக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கும் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!