தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு லொகேஷன் மேனேஜராக பணியாற்றியவர் தான் கள்ளிப்பட்டி ஜோதி.
இவர் இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்கிய சோலையம்மா, தாய் மனசு, போன்ற படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான கற்பக ஜோதி பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளிப்பட்டி ஜோதி கோபி செட்டிபாளையத்தில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அடுத்து இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!