பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 3 ம் தேதி, ஐதராபாத்தில் பூஜையுடன் அரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணி முடிந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கான டெஸ்ட் ஷுட் மற்றும் முக்கிய கேரக்டர்களுக்கான தேர்வு சென்னையில் நேற்று நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கலந்து கொண்டு ஜெயிலர் படத்திற்கான டெஸ்ட் ஷுட்டை ரஜினிகாந்த் முடித்து விட்டதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது நெல்சனின் முந்தைய படங்களை போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஜெயிலர் படத்திற்கான கதை தயார் செய்யும் பொறுப்பு முழுவதையும் நெல்சனிடமே, ரஜினிகாந்த் ஒப்படைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, ஜெயிலர் படத்தில் முக்கிய ரோல்களில் நடிக்க ஐஸ்வர்யா ராய், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோருக்கு தேர்வு வைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
பிற செய்திகள்
- சிகிச்சை பலனின்றி இறந்த நடிகர் அர்ஜுனின் தாயார்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- முக்கிய விழாவில் மாறி மாறி கிண்டலடித்த உதயநிதியும் அவரது மனைவியும் -விழுந்து விழுந்து சிரித்த சிம்பு
- சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி போன்று தான் ரன்வீர் சிங்- நிர்வாண போட்டோவை வைத்து நெட்டிசன்கள் செய்யும் அட்ராசிட்டி
- முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நடிகர் சூர்யா
- பிறந்தநாள் அன்று சூர்யா வெளியிட்ட அறிக்கை-என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!