• Sep 20 2024

அமெரிக்காவில் நடைபெறும் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய பணி- அப்டேட்டை வெளியிட்ட ஏ. ஆர் ரகுமான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கல்கியில் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகக் காத்திருக்கின்றது.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், டீஸர் & முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் A R ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகி வருகின்றது.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டால்பி அட்மாஸ் இசை மிக்சிங் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருவதாக ரஹ்மான் அறிவித்துள்ளார். இதற்காக கிரேக் டவுன்லி ரஹ்மானுடன் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement