• Sep 20 2024

விசாலாட்சியை அதட்டும் குணசேகரன்... சவால்விட்ட ஜான்சிராணி... கலவர பூமியாக மாறிய கல்யாண மண்டபம்... விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் சமீபகாலமாக ரசிகர்கள் பலரது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வினா என்னவெனில் ஆதிரை கல்யாணம் இறுதியில் யாருடன் நடக்கும் என்பது தான். 


அந்தவகையில் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடத்தி வைக்கும் நோக்கில் ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோர் ஆதிரையை அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


அதில் ஆதிரை எங்க எனக்கேட்டு குணசேகரன் ஈஸ்வரியையும், விசாலாட்சியையும் மிரட்டுகின்றார். அந்த சமயத்தில் மாமா எனக் கூறிக் கொண்டு கரிகாலனும் கதிரும் அங்கு வருகின்றனர்.


மறுபுறம் நந்தினி ஜனனியிடம் "அத்தை ஏதாவது உளறி விட்டிட்டாங்க என்றால்" என இழுக்கின்றார். பதிலுக்கு ஜனனி அத்தைக்கு எந்தக் கோவில் என்று தெரியாது என்கிறார். மேலும் ஜான்சிராணி குணசேகரனிடம் "கல்யாணம் நடந்தே தீரணும், அப்பிடி இல்ல நீ வேற ஜான்சிராணியை பார்ப்பாய் எனக் கூறி அழுத வண்ணம்  மிரட்டுகின்றார். 


Advertisement

Advertisement