• Sep 21 2024

குடும்பத்துடன் காரில் பயணித்த பிரபல நடிகரின் காரைத் தாக்கிய கும்பல்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் தமக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ள பல நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் மீசை ராஜேந்திரன். இவர் தமிழில் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர்.

தற்பொழுதும் சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில் அஜித்தைப் போலவே சிவகார்த்திகேயனை அழிக்க நினைத்தார்கள் ஆனால் அவர் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் என்று பாராட்டி இருந்தார்.

சென்னையில் வசித்து வரும் இவர் தனது பூர்வீக இடமான நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் பகுதியில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு இவர் கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருக்கும் போது சிலர் அத்து மீறி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்களிடம் மீசை ராஜேந்திரன் கேட்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முக்கூடல் காவல் நிலையத்தில், தன்னை தாக்க முயன்றதாகவும் மற்றும் நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயல்பட்டதாகவும் கூறி புகார் அளித்துள்ளார்.

இவர் புகார் அளித்துவிட்டு தன் குடும்பத்துடன் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் காரை சொக்கலான்புரம் அருகே சிலர் வழிமறித்து காரின் பின்புற கண்ணாடியை கல்வீசி உடைத்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஊருக்கு வரும்போது பிரச்சினை வரும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் காவல் பாதுகாப்பிற்கு ஆணை வாங்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement