நேற்றைய தினம் இடம்பெற்ற பத்துதல இசைவெளியீட்டு விழாவிற்கு கலந்துகொள்ள வருகை தந்த நடிகர் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் அவர்களிடம் தமிழக தொலைக்காட்சி நிருபர் ஒருவர் காரில் வைத்தே பிரத்தியேக நேர்காணல் ஒன்றை எடுத்திருந்தார்.
அப்போது அவரிடம் பல கேள்விகள் குறித்த நிருபரால் கேட்கப்பட்டிருந்தது அதற்கு நெகிழ்ச்சியுடன் பதிலளித்திருந்தார்.
பத்துத்தல திரைப்படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க ரசிகர்கள் எல்லாம் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படித்தான் நானும் எதிர்பார்க்கிறேன் படம் நல்லா வந்திருக்கிறது என சொல்லுறாங்க, காத்திருக்கிறேன் என்றார்.
சிம்பு என்றால் பல விமர்சனங்கள் வைக்கப்படும் சூட்டிங்கிற்கு நேரத்திற்கு வரமாட்டார் என ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவிற்கே இரண்டு மணிக்கு வந்துவிட்டார் இதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க, அவர் எப்போதும் சரியான நேரத்திற்கு போகிறவர்தான், ஒரே டேக்கில் நடத்து முடித்துவிடுவார், இதில் என்ன பிரச்சினை என்றால் இயக்குனர் காலையில் வேறொருவரை வைத்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருப்பார் அப்போது சொல்லுவார் சிம்பு நீங்கள் மதியம் போல் வாங்க சரியாக இருக்குமென்பார், அவர் ஜோசிப்பது சும்மா ஏன் சிம்புவை அழைத்து காக்க வைக்க வேண்டுமென்று, அப்படித்தான் நாங்கள் தயாரித்த படத்திற்கே வடிவேலுவிற்கு சொன்னோம்.
ஆனால் இது இயக்குனருக்கும், சிம்புவிற்கும்தான் தெரியும் தயாரிப்பாளர் வந்து கேட்ப்பார் யார் யார் வந்திருக்கிறது என அப்போது அங்கிருக்கிறவர்கள் சொல்லுவார்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள் சிம்புதான் வரவில்லையென்று, உடனே தயாரிப்பாளர்கள் நடப்பது விளங்காமல் சிம்பு சரியாக வாறதில்லையென்பார்கள் இதுதான் இங்கு நடக்கும் பிரச்சினை என்றார்.
ரசிகர்களுடன் ஒன்றிணைந்து இருக்கக்கூடியவர் சிம்பு அந்தவகையில் தற்போது ஏழாயிரம் ரசிகர்கள் ஒன்றுகூடி இந்த விழாவை கொண்டாட இருக்கிறார்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது, அதற்கு நாற்பத்தையாயிரம் ரசிகர்கள் வரை வருவதற்கு டிக்கெட் கேட்டுக்கொண்டிருந்தனர் ஆனால் கொடுக்க முடியவில்லை இதைவிட பெரிய இடத்திற்கு எங்கு போறது, டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு எனது வருத்தங்கள் என்றார்.
மேலும் கடந்த காலங்களில் சிம்புவை நினைத்து மனவேதனைப்பட்ட காலங்கள் இருந்தது ஆனால் தற்போது அவரது வளர்ச்சி எப்படியிருக்கிறது மாநாடு, வெந்து தணிந்தது காடு தற்போது பத்துத்தல என அடுத்தடுத்து திரைப்படங்கள் வருகிறது எப்படி உணர்கிறீர்கள் என கேட்க, மனிதன் என்பவன் ஒரு ஒரு படியாகத்தான் ஏறமுடியும், ஒரே நேரத்தில் நாலுபடி ஏறமுடியாது என தெரிவித்திருந்தார்.
இந்த நேர்காணலை பார்த்த ரசிகர்கள் சிம்பு சூட்டிங்கிற்கு வரமாட்டார் என்ற கருத்துக்கு போறபோக்கில் அவரது தாயார் பதிலை சொல்லிவிட்டார்,அப்போ சிம்பு நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார் என்று வெளியான செய்திகள் எல்லாம் பொய்யா என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!