• Sep 20 2024

மீனா அப்பாவால் ஜீவாவுக்கு வந்த புதிய பிரச்சினை- கடும் கோபத்தில் கதிர் எடுத்த முடிவு-Pandian Stores Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லை, கண்ணன்-ஐஸ்வர்யா என இதில் நடித்து வருபவர்கள் அனைவரும் பிரபலமாகி விட்டனர்.

 இந்த சீரியலின் கதைப்படி பல போராட்டங்களில் பின்னர் குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைந்து விட்டதோடு தமது புது வீட்டுக்கும் சென்று விட்டனர். அத்தோடு தனத்திற்கு கான்சர் என்ற விஷயமும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் விரைவில் முடிவடைந்து 2வது சீசன் தொடங்க இருக்கிறது என ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. அத்தோடு இந்த சீரியல் செப்டம்பர் 30-ஆம் தேதியோடு தொடரை முடித்து விடுவார்கள் எனக் கூறப்படுகின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜீவாவின் மாமனார் தன்னுடைய இரண்டாவது மருமகனை வைத்து ஜீவாவை அடிக்கின்றார். இதை அறிந்த கதிர் ஜீவாவைக் கூட்டிக் கொண்டு போய் மீனவின் அம்மாவிடம் என்னுடைய அண்ணாவுக்கு ஏதாவது ஆச்சு என்றால் கொலை செய்திட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்க மாட்டேன் என்று கூறுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement