பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் சீசன் 5 ஐ பொறுத்தவரை அதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் கருத்துச் சொல்லாமல் கோஷ்டி அமைத்துக்கொண்டு செயல்பட்டனர்.
குறிப்பாக டைட்டில் வென்ற ராஜு ஒரு இடத்தில் கூட தனது துணிவான கருத்தை பதிவு செய்யாமல் எல்லோருக்கும் நல்லவர் போல் நடித்து மிக்சர் பார்ட்டியாக வலம் வந்தார். தாமரை உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே துணிந்து பிக்பாஸ் வீட்டில் நியாயத்தை பேசினர். இதில் அவர்கள் அவர்களாக இருந்தனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு சற்றுக் குறைந்தது.
இதனால் அந்த சீசன் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் அதிகமானது. இதனைத் தொடர்ந்து சீசன் 6 தொடங்கிய போதிலிருந்தே பிக்பாஸ் டாஸ்க் கொடுத்து சுவாரஸ்யமாக்கினார். அந்த வகையில் கமல்ஹாசனும் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்களிடம் நேரடியாக குறை நிறைகளை கூறி விளாசி வருகின்றார்.
அந்தவகையில் நேற்றைய தினம் அனைத்துப் போட்டியாளர்களினதும் குறைகளை சுட்டிக் காட்டி வறுத்தெடுத்திருந்தார் கமல். அதில் கமல்ஹாசன் கண்டிக்காமல் விட்ட ஒருவர் என்றால் அது கதிரவன் தான். என்னினும் அவருக்கும் நேற்று டோஸ் விழுந்தது.
அதாவது எப்போதும் கழுவுகிற மீனில் நழுவுகிற நபராக அனைவருக்கும் நல்லவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேமரா சென்ஸுடன் இயங்கிக்கொண்டு எந்த ஒரு நியாயத்தையும் தட்டிக் கேட்காமல் வலம் வந்த கதிரவனை கமல் மறைமுகமாக 'மிக்சர் பார்ட்டியில் உங்கள் பெயர் அதிகம் வந்திருக்கும் என எதிர்ப்பார்த்தேனே" என சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமல்லாது கதிரவனின் கண்ணை மூடி வாயை குவித்து சிரிக்கும் ஒரேவித முகபாவனை பார்வையாளர்களை பெரிதும் எரிச்சல் மூட்டும். அது கமலையும் பிக்பாஸ் டீமையும் எரிச்சல் மூட்டியிருக்கும்போல இருக்கு. இதனால் அதை செய்துகாட்டி ஒரே மாதி திட்டும்போதும் பாராட்டும் போதும் செய்கிறீர்கள் அதை இனிமேல் செய்யாதீர்கள், மிக்சர் பார்ட்டியாக இருக்காதீர்கள் என்று கமல் சுட்டிக்காட்டினார். அதற்கும் அதே ரியாக்ஷனை கொடுத்து கதிரவன் ஓக்கே சொன்னது பலராலும் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்..
Listen News!