• Sep 21 2024

ராதிகா கொடுத்த அடுத்த ஷாக்..என்ன செய்வது அறியாமல் நிற்கும் பாக்கியா..இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்ாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்.

அமிர்தாவின் அப்பா அம்மா ஊருக்கு கிளம்ப ஈஸ்வரியை பார்க்க ரூமுக்குள் வருகின்றனர். அங்கு ஈஸ்வரி நிலாவுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து  மகிழ்ச்சியடைந்து விட்டு  நாங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லி அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள்வதற்காக நன்றி கூறுகின்றனர். அத்தோடு அங்கு வரும் ராமமூர்த்தி இது நம்ம ஊரு பலகாரம் என சொல்லி ஊருக்கு எடுத்து போக சொல்லி கடையில் இருந்து வாங்கி வந்த பலகாரத்தை கொடுக்கிறார்.அதன் பிறகு இருவரையும் ஊருக்கு கொண்டு போய் விட்டுவருவதாக எழில் அவர்களை கூட்டிட்டு போகின்றார்.

இதனையடுத்து  இனியா ஸ்கூலுக்கு கிளம்பி தயாராகி இருக்க லஞ்ச் பாக்ஸ் ரெடியானு கேட்க ராதிகா உனக்கு நான் என்ன அம்மாவா? நான் எதுக்கு உனக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டி தரணும்? இதற்கெல்லாம் மட்டும் நான் தேவையா? என கேட்க இனியா எனக்கு நீங்க இதோட லஞ்ச் கட்டி தர தேவையில்லை என கூறுகின்றார்.கோபி லஞ்ச் எடுத்துட்டு போக சொல்ல ராதிகா சொன்ன விஷயத்தை சொல்லி இனிமே எனக்கு அவங்க லஞ்ச் கொடுக்க தேவையில்லை. எனக்கு நீங்க காசு கொடுத்துடுங்க தான் கேன்டீன்ல சாப்பிட்டுக்கிறேன் என கூறுகின்றார்.

அதன் பின்னர் இனியா நான் தாத்தாவோட போறேன் என சொல்லி கிளம்புகிறார்.இதன் பிறகு கோபி ராதிகாவுடன் அவ சின்ன குழந்தை அவகிட்ட எதுக்கு காலையில் சண்டை போடுற என் கேள்வி கேட்க ராதிகா அவ எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கணும் என கூறுகின்றார்.

அடுத்ததாக பாக்கியா கேன்டினில் இருந்து கிளாசுக்கு கிளம்ப அங்கு வரும் ராதிகா இன்னும் இரண்டு நாள்ல பேக்கரி ஐட்டம் எல்லாம் இங்கே இருக்க வேண்டும் என சொல்ல பாக்யா சரியென சொல்கிறார். எப்படி கடையில் இருந்து வாங்கி வந்து விட்டீர்களா என்று கேட்க ஆமாம் நல்ல கடையா பார்த்து வாங்குவோம் என பாக்கியா சொல்ல அப்படியெல்லாம் நீங்க வெளியில் எதுவும் வாங்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் நீங்க தான் சமைக்கணும் என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அத்தோடு  ராதிகா இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற டாஸ்க் என சொல்லி அங்கிருந்து நடக்கிறார்.

அதன் பின்னர்  கிளாசுக்கு வந்த பாக்கியா ராதிகா சொன்னது நினைத்து என்ன செய்வது என வருத்தத்தில் உட்கார்ந்து இருக்க பழனிசாமி விஷயத்தை கேட்க பாக்யா நடந்ததை சொல்ல அவர் கேக் செய்றதெல்லாம் ரொம்ப ஈஸியான விஷயம் ஒன்னு பேக்கிங் கிளாஸ் போங்க, அப்படி இல்லன்னா நான் உங்களுக்கு சொல்லி தரேன் என கூறுகிறார்.

அத்தோடு  எல்லாத்தையும் நீங்களே தான் செஞ்சு வைக்கணும்னு எந்த கேட்டின்லையும் சொல்ல மாட்டாங்க, இங்க மட்டும் எப்படி சொல்றாங்க என கேட்க ராதிகா தன்னுடைய முன்னாள் கணவரின் இன்னாள் மனைவி என பாக்யா உண்மையை உடைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement