நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் பெயரை அதிகம் பாப்புலர் ஆக்கியது நடிகர் கூல் சுரேஷ் தான். அவர் தியேட்டர் முன்பும் youtube சேனல்களுக்கு அளிக்கும் பேட்டியில் எப்போதும் 'வெந்து தணிந்தது காடு.. வணக்கத்த போடு' என தொடர்ந்து சொல்லியே அதிகம் ப்ரோமோஷன் செய்தார் என்று தான் கூற வேண்டும்.
அதற்காக சிம்புவே கூல் சுரேஷுக்கு ட்விட்டர் லைவ் உரையாடலில் தெரிவித்து இருந்தார். தற்போது வெந்து தணிந்தது காடு படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பும் வசூலும் குவித்து வருகிறது.
எனினும் தற்போது நடிகர் கூல் சுரேஷ் அளித்து இருக்கும் பேட்டியில் தனக்கு உதவுவது சந்தானம் மட்டும் தான் என தெரிவித்து இருக்கிறார்.
"உனக்கு வருமானம் என்ன என பலரும் கேட்கிறார்கள். தற்போது வரை என் நண்பன் சந்தானம் தான் என்னை பார்த்துக்கொள்கிறார். என்னை பற்றி யாரவது சந்தானத்திடம் தவறாக கூறினால் கூட அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். எனக்கு உதவி செய்வது ஒரே இடம் தான். அதையும் பார்த்து சிலர் பொறாமை படுகிறார்கள்" என கூல் சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் சில ரசிகர்கள் இதை கேள்வி பட்டதுடன் சிம்புவிற்காக இவ்வளவு பாடுபடுகிறீர்கள் அவர் உங்களை கண்டுகொள்ளவில்லை் இருந்தாலும் நடிகர் சந்தானம் இப்படியெல்லாம் உதவி செய்கிறார்.அவருக்காக நீங்கள் குரல் கொடுக்கலாமே என கேட்டு வருகிறார்கள்.சிம்பு ஏன் உங்களை கைவிட்டார் என்று எல்லாம் கேட்டு வருகிறார்கள்.
Listen News!