• Sep 20 2024

இந்த சீரியலில் ஒரே விஷேசம் தான் போங்க- மீண்டும் கொண்டாட்டத்தில் வானத்தைப் போல சீரியல் குழுவினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்கள் லிஸ்டில் இடம் பிடித்து வருகிறது. இந்த லிஸ்டில் ஃபேமலி ஆடியன்ஸ் அதிகம் விரும்பும் சீரியலாக இருப்பது வானத்தை போல. இந்த சீரியல் இரவு 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகி வருகிறது.

அத்தோடு இந்த சீரியல் அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடராகவும் உள்ளது.இதுவரை வானத்தை போல சீரியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

சமீபத்தில் பொன்னியாக நடித்து வந்த பிரீத்தி குமார் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் இப்போது பொன்னி ரோலில் சைந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார்.இதற்கு முன்பு, இந்த தொடரில் நாயகியாக அதாவது சின்ராசுவின் தங்கை துளசி ரோலில் ஸ்வேதா கெல்ஜ் நடித்து வந்தார்.

இவர் மாடலிங் செய்து கொண்டிருக்கும் போதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. துளசி கதாபாத்திரத்தில் தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனார். ஆனால் திடீரென்று இவர் சீரியலில் இருந்து விலகினார். அதற்கான காரணம் வெளியாகவில்லை. ஆனால் தற்போது கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பாகும் புத்தம் புதிய சீரியலில் நடிக்கிறார்.

இவரை போலவே அண்ணன் சின்ராசு ரோலில் நடித்து வந்த தமன்குமாரும் சீரியலை விட்டு கிளம்பினார்.அவர் ரோலில் தற்போது ஸ்ரீகுமார் நடிக்கிறார். அவரின் தங்கை துளசியாக மன்யா ஆனந்த் நடிக்கிறார்.தற்போது சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

சின்ராசு - பொன்னி திருமணம் முடிந்து அதன் மூலம் ஏகப்பட்ட பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. ஒருபக்கம் சந்தியா கழுத்தில் தாலி இருக்கும் விஷயமும் தெரிந்து விட்டது. இன்னொரு பக்கம் சரவணனும் பொன்னியை தேடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் வானத்தை போல சீரியல் பல தடைகளை கடந்து 500 எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருவதால் இந்த நிகழ்வை சீரியல் குழு கேக் வெட்டி செலப்ரேஷன் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement