• Sep 20 2024

புது வீட்டில் ஆட்டம்பாட்டம் என சந்தோஷமாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்- திடீரென வெடித்த சண்டை-Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பால் காய்ச்சுகின்றனர்.தொடர்ந்து எல்லோரும் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யாவின் சித்தி எல்லோரும் டான்ஸ் ஆடலாம் என்று கூட்டிட்டு போகின்றார். இதனால் ஜோடி ஜோடியாக எல்லோரும் டான்ஸ் ஆடுகின்றனர்.


தொடர்ந்து தனம் வேலை செய்து கொண்டே இருப்பதால் மீனா அவரைக் கூட்டிக் கொண்டு வந்து இருத்தி ட்ரெஸ்ட் எடுக்கச் சொல்கின்றார்.அப்போது  குழந்தை பெற்ற உடம்பு அதிக வேலை செய்யக் கூடாது தானே அதனால தான் மீனா கூட்டிட்டு வந்து இருத்திறா என தனத்தின் அம்மா கூற முல்லையின் அம்மா கோபப்படுகின்றார்.

பின்னர் முல்லையின் அம்மா கிளம்புறேன் என் சொல்ல, தனம் இன்டைக்கு ஒரு நாள் தங்கிட்டு போங்க என்று சொல்கின்றார்.அப்போது மீனா தான் கிளம்புவதாக சொல்ல தனம் நீயும் போறியா மீனா என்று கேட்க மீனாவின் அம்மா உங்களுக்கு வேணும் என்றால் வரணும் இல்லை என்றால் போகனுமா என்று சொல்லி கேட்கின்றார்.

அப்போது மீனா அப்படி ஒன்றும் இல்லை, எதுக்குமா இப்போ சண்டைக்கு வருகின்றாய் என்று சமாளித்து விடுகின்றார். மறுபுறம் ஜனார்த்தனனும் அவரது இரண்டாவது மருமகனும் குடித்து விட்டு வருகின்றனர். அத்தோடு குடிப்பதற்கு வரும்படியாக மூர்த்தியை அழைக்க கதிர் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


தொடர்ந்து வெளியாகிய ப்ரோமோவில் ஜீவாவின் சட்டையை ஜனார்த்தனின் இரண்டாவது மகன் பிடித்துக் கொண்டிருக்க மூர்த்தி அவரை வந்து அடிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோவும் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement