• Sep 20 2024

கே.ஜே.ஜேசுதாஸின் பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இன்னிசைக் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பல பாடகர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் .

இவர்கள் பாடிய பாடல்கள் பல நிகழ்வுகளில் ரசிகர்களால் பாடப்பட்ட வருகின்றது. அந்த வகையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேற்று இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்றை பின்னணி பாடகர் எடவா பஷீர் என்பவர் பாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனை அடுத்து உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 78 வயதான அவரின் மறைவுக்கு இசை உலகம் தனது இரங்கலை தெரிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement