• Sep 21 2024

சினிமா தயாரிப்பாளரை கொன்று கூவம் அருகே வீசிய நபர்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் பாஸ்கரனை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் உடலை வைத்து கூவம் அருகே வீசிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தான் தயாரிப்பாளர்  பாஸ்கரன். 62 வயதாகும் அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.மேலும் பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து, The Man Company, Wow & பல பிராண்டுகளின் அனைத்து அத்தியாவசிய அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளையும் சேமித்து வைக்கவும்.

திருமண வரவேற்பில் கலந்து கொள்ள கிளம்பிச் சென்ற பாஸ்கரன் வீடு திரும்பவில்லை.எனினும் இதையடுத்து அவரின் மகன் தன் அப்பாவை காணவில்லை என்று ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.



இதற்கிடையே சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகரில் நேற்று  சனிக்கிழமை காலை மாநாகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய வந்தபோது கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் ஒரு உடல் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு தலை, கழுத்தில் காயங்களுடன் பாஸ்கரன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.அத்தோடு பாஸ்கரனின் கார் அப்பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குடியிருப்பில் வசித்து வரும் கணேசன் மாயமானதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 தனிப்படைகளை அமைத்து கணேசனை தேடி வந்தார்கள். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கணேசனை கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் கட்டுமானத் தொழில் செய்து வந்தார். அவர் ஒரு சில படங்களையும் தயாரித்திருக்கிறார். மேலும் பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்திருக்கிறார்.



Advertisement

Advertisement