• Sep 20 2024

நான்கு நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு நடிகர் ராம்சரனை சந்தித்த நபர்-இப்படி ஒரு ரசிகரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ராம் சரண். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இப்படத்தில் இவரது நடிப்பானது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அத்தோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவ்வாறு முன்னணி நடிகர்களாக இருப்பவர்களை சந்திப்பதற்கு பொதுவாக ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதுண்டு. அதற்காக பலரும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு.

அப்படி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ரசிகர் தனது அபிமான நடிகரான ராம்சரணை சந்திப்பதற்காக தனது ஊரிலிருந்து 264 கிலோமீட்டர்கள் நடந்தே வந்து ராம்சரனை சந்தித்துள்ளார் உளில் நடைபயணமாக இந்த தூரத்தை அவர் கடந்து வந்துள்ளார்.

அதேசமயம் தன்னுடைய சொந்த வயலில் நெல் நாற்று நடும் சமயத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய பரப்பளவில் நெல் நாற்றுக்கள் மூலமாகவே ராம்சரணின் உருவத்தை வரைந்து அதையும் புகைப்படமாக எடுத்து கொண்டு வந்து ராம்சரணுக்கு பரிசளித்துள்ளார். மேலும் தனது வயலில் விளைந்த இரண்டு மூட்டை நெல்லையும் ராம்சரணுக்கு அளித்து அவரை நெகிழ வைத்துள்ளார் இந்த அதி தீவிர ரசிகர்.

இப்படி ஒரு ரசிகர் தன்னை சந்திக்க வருவதை கேள்விப்பட்டு அவருக்காக நேரம் ஒதுக்கி அவர் தனக்காக செய்துள்ள விஷயங்களை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் ராம்சரண். தனது ரசிகருடன் ராம்சரண் நடத்திய சந்திப்பு குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement