• Sep 21 2024

திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம்.. தீபாவின் காதலருக்கு மட்டும் 55 கேள்விகளை ரெடி செய்த போலீசார்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தீபா மரண வழக்கில் அவரது காதலரிடம் விசாரிக்க கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை தீபா. தெறி, துப்பறிவாளன், ராட்சசன் ஆகிய படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.இவ்வாறுஇருக்கையில் தீபா வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாக  நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் கெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அவர் தனது காதலை ஏற்றுக்கொள்ளாததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தார் தீபா.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை கோயம்பேடு போலீசார், தீபாவை காதலித்தது இயக்குநரும் தயாரிப்பாளருமான சிராஜுதீன் என்பவர்தான் என்பதை கண்டுபிடித்தனர். ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான சிராஜூதீன் தீபாவிடம் நெருக்கமாக பழகியதும், பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



இருவரின் போன் உரையாடல்கள் மற்றும் நெருக்கமாக இருந்த போட்டோக்களையும் கைப்பற்றிய போலீசார சிராஜுதீனை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் படப்பிடிப்பில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார். இவ்வாறுஇருக்கையில்  சிராஜுதீனிடம் விசாரணையின் போது கேட்க 55 கேள்விகளை கோயம்பேடு போலீசார் தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிராஜுதீன் நாளை கோயம்பேடு காவல் நிலையத்தில் அவர் முன்னிலையாகும் போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு தீபாவின் ஐபோன் மாயமானது குறித்து அவரது சகோதரர் ராஜுவிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement