• Sep 21 2024

ஊருக்கே வந்து சிவகாமி குடும்பத்துக்கு சாபம் விட்ட சாமியார்– இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் இரு சீரியல்கள் தான் ராஜா ராணி.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..

சிவகாமி சரவணன் சந்தியாவை அழைத்து கேஸை வாபஸ் வாங்க வேண்டும் என சொல்ல சரவணன் முடியாதென வெளிப்படையாக சொல்கிறார். மேலும் அந்த சாமியார் பகைச்சிக்கிறது தப்பு இல்லையா உன் பொண்டாட்டி பேச்சை கேட்டு கேட்டு இப்படி பண்ணாத என எவ்வளவு சொல்லியும் சரவணன் இதில் உறுதியாக இருக்க சிவகாமி கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.

மேலும் அதன் பின்னர் சரவணன் சந்தியாவிடம் எல்லோரும் தப்பா பேசினால் பேசட்டும் ஆனா உங்க மேல வீண் பழி போடுறது தான் என்னால பொறுத்துக்க முடியல என கூறுகிறார். சாமியரோட முகத்திலேயே கிழித்தே ஆக வேண்டும் என கூறுகிறார். அதன் பின்னர் சாமியார் ஊருக்கு வர எல்லோரும் அவரை சூழ்ந்து கொள்கின்றனர்.

சரவணன் சந்தியாவை பார்த்து உங்களுக்கு கடைசியாக அந்த அகிலாண்டேஸ்வரி ஒரு வாய்ப்பு தருகிறார் என கேட்க சரவணன் முடியாது என கூறுகிறார். நீங்க அந்த கடவுளையே பகைச்சுக்கறீங்க அதுக்கான பலனை கண்டிப்பா அனுபவிப்பீங்க, நீங்க மட்டும் இல்ல உங்க குடும்பமே அனுபவிக்கும் நாசமா போகுமென சாபம் விட சிவகாமி வாடா சரவணா கேஸ் வாபஸ் வாங்கலாம் என கூப்பிட சரவணன் முடியாது என்று கூறி விடுகின்றார்.

அதன் பிறகு சிவகாமி அங்கிருந்து சரவணன் என்ன அசிங்கப்படுத்திட்டான் என புலம்பி கொண்டு வீட்டுக்கு வர அர்ச்சனா வேற அவரை ஏற்றி விட சரவணன் மாறமாட்டான் என் செந்தில் சொல்ல அவனை நான் மாத்தி காமிக்கிறேன் நானா அந்த சந்தியாவானு பார்க்கலாம் என சபதம் எடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement