கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தற்போது புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கிய நிலையில் அவரின் காரின் தற்போது வெளியாகி உள்ளது.
கேளடி கண்மனி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். மேலும் இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில மாதத்திலேயே கர்ப்பமான திவ்யா, தனக்கு குழந்தை பிறக்கவுள்ள தகவலை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் திவ்யாவுக்கும் அவரது கணவர் அர்னவ்விற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் இதில் அர்னவ் தன்னை அடித்து உதைத்ததில் தனது வயிற்றில் இருக்கும் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் திவ்யா.எனினும் இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
எனினும் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை திவ்யாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடன் செவ்வந்தி சீரியலில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் இணைந்து வளைகாப்பு நடத்தினர். இதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் திவ்யா ஸ்ரீதர்.
இவ்வாறுஇருக்கையில், நடிகை திவ்யா ஸ்ரீதர் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதிநவீன வசதிகள் கொண்ட MG hector sharp cvt என்கிற மாடல் காரை தான் அவர் புதிதாக வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக கார் வாங்கியுள்ள நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Listen News!