• Sep 20 2024

தனது குழந்தையைப் பார்க்க வந்த ராம்சரண் அணிந்திருந்த மணிக்கூட்டின் விலை இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன்,  ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு, திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆன  பின்னர்,  உபாசனா கர்ப்பமாக இருந்த நிலையில் இந்த  தம்பதியருக்கு செவ்வாய் கிழமை ஜூன் 20-ஆம் தேதி அன்று, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

உபாசனா ராம்சரணுக்கு செவ்வாய் கிழமை அதிகாலை 1:49க்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.


அதே போல் குழந்தையையும், உபாசனாவையும் பார்க்க அல்லு அர்ஜுன், நிஹாரிகா, பவன் கல்யாண் உள்ளிட்ட சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பலர் தொடர்ந்து வருகை தந்தனர்.குழந்தை பிறந்த பின்னர், சிரஞ்சீவி தாதாவான சந்தோஷத்தையும் செய்தியாளர்கள் முன்பு வெளிப்படுத்தினார்.


இவர்கள் குழந்தையை துாக்கிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இதனை அடுத்து தற்பொழுத ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராம் சரண் தன்னுடைய மகளை துாக்கிக் கொண்டு போகும் போது கையில் கட்டியிருந்த மணிக்கூட்டின் விலை ரூ. 1.63 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் இத்தனை பெறுமதி வாய்ந்ததா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement